districts

img

ஆசிரியர்களை தரக்குறைவாக நடத்தும் ராணிப்பேட்டை கல்வி அலுவலர் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்

ராணிப்பேட்டை, ஏப். 8 - ஆசிரியர்களை தரக்குறை வாக நடத்தும் சோளிங்கர் வட்டாரக் கல்வி அலுவலர் கே.வி.பாபு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வியாழனன்று (ஏப். 6) ராணிப் பேட்டை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆசிரியர்கள் காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். மாநிலத் தலைவர் மூ. மணி மேகலை தலைமை தாங்கினார். பெண் ஆசிரியர்களை வீடியோ எடுத்து தரக்குறைவாக நடத்தும் போக்கை கைவிட வேண்டும், ஆசிரியர்களையும், சங்க பொறுப்பாளர்களை யும் மிரட்டும் நடவடிக்கையை கைவிட உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, தொடக்க கல்வி அலுவலர் பிரேமலதா ஆகியோர் ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

;