districts

img

வக்ப் வாரிய காலியிடங்களில் மருத்துவமனை, பள்ளிகள் அமைக்க சிறப்பு நிதி ஒதுக்கிடுக!

ஒன்றிய அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி.நேரில் கோரிக்கை இராமநாதபுரம், ஜூன் 1- வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான காலி  இடங்களில் மருத்துவமனை, பள்ளிகள், கல்லூரிகள் ஏற்படுத்திட நடைமுறைகளை எளிதாக்கி சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தர் அபாஸ் நக்வியிடம் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி நேரில் கோரிக்கை கடிதம் அளித்தார்.- இது குறித்து நவாஸ்கனி எம்பி அமைச்ச ருக்கு வழங்கிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத்திற்கு  சொந்தமான பல்வேறு இடங்கள் பயன்படுத்  தப்படாமலும், ஆக்கிரமிப்புக்கு உள்ளாக் கப்பட்டும் பயனற்று இருக்கிறது. தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் உறுப்பினராக நேரடி யாக பல்வேறு இடங்களை ஆய்வும் செய்து  இருக்கிறோம். ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்ட சொத்துக்களை மீட்பது மட்டுமல்லாது, இருக்கும் சொத்துக்களை ஆக்கிரமிக்கப் படாமல் தடுப்பதற்கும், அதனை மக்களுக்கு பயன்படும் வண்ணம் பயன்படுத்த வழி வகை செய்ய வேண்டும்.  வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் மக்கள் பயன்பெறும் வண்ணம் மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரி கள் ஏற்படுத்திட நடைமுறைகளை எளி தாக்கி சிறப்பு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கிட வேண்டும். சிறுபான்மையின மாணவர் களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை முறையாக தகுதியுடைய மாணவர்களுக்கு முழுமையாக வழங் கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண் டும். சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை குறித்த போதிய  விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முழுமை யாக தகுதியுடைய மாணவர்கள் பயனடை வதை உறுதி செய்யவும், மாநில அளவி லான கண்காணிப்பு குழுவை ஏற்படுத்தி சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் நேரடி கண்காணிப்பில் கல்வி உதவித் தொகை முழுமையாக கிடைக்கப் பெறு வதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

;