districts

img

தீபாவளி உதவித் தொகை ரூ.5 ஆயிரம் வழங்குக புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, அக்.14- முறைசாரா தொழி லாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆட்டோ ஓட்டுநர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட முறைசாரா தொழிலளார்களுக்கு வரும் தீபாவளி பண்டிகை கால உதவித்தொகை ரூ.5000 ஆயிரம் வழங்க வேண்டும். புதுச்சேரி நடைபாதை வியாபாரிகளின் வாழ்வா தாரத்தை சீர்குலைக்கும் நட வடிக்கையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்ப ட்டன. புதுச்சேரி காந்தி வீதி முத்துமாரியம்மன் கோவில்வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் எம்.பி.மதி வாணன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர்ஆர். ராஜாங்கம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். செயற்குழு உறுப்பி னர்கள் சீனுவாசன், கலியமூர்த்தி,கிளைச் செய லாளர்கள் ஸ்டாலின், ஆனந்த், பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;