districts

img

மாவட்ட ஆட்சியரை அவதூறாகப் பேசிய எச்.ராஜாவை கண்டித்து மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.8 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரை அநாகரிகமான முறையில் விமர்ச னம் செய்த பாரதிய ஜனதா கட்சியின்  முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில தினங்களுக்கு முன்பாக புதுக் கோட்டை மாவட்டம் மேற்பனைக்காடு கிராமத்திற்கு பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா வந்திருந்தார். அங்கு மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய அவர் தொடர்ந்து, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும்  அதிகாரிகளை இந்துக்களுக்கு எதிராக  செயல்படுவதாக குற்றம்சாட்டி பேசினார். அப்போது புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதாராமுவை தரம்  தாழ்ந்து விமர்சனம் செய்து பேசினார். எச்.ராஜாவின் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கையைக் கண்டித்தும், அவர்மீது அவதூறு வழக்குப் பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி யும் வியாழக்கிழமை புதுக்கோட்டை யில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலைவர் டி.சலோமி  தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் பி.சுசீலா, சிஐடியு மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர்,  கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் சி.அன்புமணவாளன், தையல் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சி.மாரிக்கண்ணு உள்ளிட் டோர் பேசினர்.

;