districts

img

மருத்துவமனையில் என்எஸ்எஸ் மாணவர்கள் தூய்மைப் பணி

அறந்தாங்கி, மார்ச் 22- புதுக்கோட்டை மாவட்டம் பெருநாவ லூரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள், அலுவலர் எஸ்.ரமேஷ் தலைமையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனை பகுதி களில் இருந்த செடிகள் மற்றும் குப்பை களை அகற்றி தூய்மை பணி மேற் கொண்டனர்.  நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் (பொ) முனைவர் ரேணுகாதேவி தலைமையில், மருத்துவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை யில், நகர்மன்ற தலைவர் இரா.ஆனந்த் துவக்கி வைத்தார்.  நிகழ்வில், நகர்மன்ற உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்கள், செவிலி யர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாண வர்கள் கலந்துகொண்டனர்.

;