districts

img

தீண்டாமை ஒழிப்பு முன்னணி நாகை மாவட்ட பேரவை

நாகப்பட்டினம்,  ஜூன் 13 - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகை  மாவட்ட பேரவை அரசு ஊழி யர் சங்க கூட்டரங்கில் நடை பெற்றது. மாவட்ட துணைத் தலை வர் கே.சித்தார்த்தன் தலைமை  வகித்தார். பேரவையை கீழ்வேளூர் சட்டமன்ற உறு பினர் வி.பி.நாகைமாலி துவக்கி வைத்து உரையாற்றி னார். மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ் வேலை  அறிக்கையை சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அ.தி.அன்பழகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆவ ராணி ஆனந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநில பொதுச் செய லாளர் கே.சாமுவேல்ராஜ் நிறைவுரையாற்றினார். மாவட்டத் தலைவராக ஜி. வினோத் ராமலிங்கம், மாவட்ட செயலாளராக ப. சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட பொருளாளராக ஆ. லெனின் ஆகியோரை உள்ள டக்கிய 21 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது.

;