districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சாரம்

திருவாரூர், ஆக.31 - ஆளும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்து துண்டு பிரசுரம் வழங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது. அத னொரு பகுதியாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் பிரச்சா ரங்கள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் திருவாரூர் ஒன்றி யம் வடகரையில் கிளைச் செயலாளர் சிவன்  முன்னிலையில் நடைபெற்ற இப்பிரச்சா ரத்தில், ஒன்றிய செயலாளர் என்.இடும்பை யன் பேசினார். வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டது.
முத்துப்பேட்டை 
முத்துப்பேட்டை நகரக் குழுவின் சார்பில்  நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத் திற்கு நகர செயலாளர் சி.செல்லத்துரை தலைமை வகித்தார். முத்துப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் துவங்கிய பிரச்சார இயக்கத்தை, மாவட்டக்குழு உறுப்பினர் கே.வி.ராஜேந்திரன் உரையாற்றி துவக்கி வைத்தார். குமரன் பஜார், சித்தேரி ஊராட்சி ஒன்றிய சாலை, ஆசாத் நகர் பாலம் வழியாக  8 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்று, இறுதி யாக புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு உரை யாற்றி முடித்து வைத்தார்.  நீடாமங்கலத்தில் நடைபெற்ற பிரச்சார  இயக்கத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ரெ.சுமதி, ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, நகரச் செயலாளர் தமிழ்மணி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
குடவாசல்
நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் கடைத்தெருவில் நடைபெற்ற பிரச்சாரத் திற்கு சிபிஎம் நன்னிலம் ஒன்றிய செயலா ளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித்தார்.
எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு
கந்தர்வகோட்டையில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கட்சியின் கறம்பக்குடி தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.ரெத்தினவேல் தலைமை வகித்தார். கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எ.ராமையன், ஒன்றியக்குழு உறுப்பினர் கே.சித்திரைவேல் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.  கீரனூரில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு கீரனூர் நகரச் செயலாளர் என்.ஆறு முகம் தலைமை வகித்தார். குன்றாண்டார் கோவில் ஒன்றியச் செயலாளர் எஸ்.கலைச் செல்வன், மாவட்டக்குழு உறுப்பினர் கே. தங்கவேல், விதொச மாவட்டத் தலைவர் எம்.சண்முகம், விவசாயிகள் சங்க ஒன்றி யத் தலைவர் பெருமாள், கீரமங்கலம் பேரூ ராட்சி எம்.மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை தெற்கு  ஒன்றியம் சார்பில் ‘மோடி அரசுக்கு முடிவு கட்டு வோம், இந்தியாவின் இருளை அகற்று வோம்’ என்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை நாகை மாவட்டச் செய லாளர் வி.மாரிமுத்து பாப்பாகோவில் கடைத் தெருவில் பொதுமக்களுக்கு வழங்கினார். நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடி வேல், விச ஒன்றியத் தலைவர் ஜீவராமன், ஆலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் என்.வடி வேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் 
கட்சியின் கரூர் மாநகர குழு சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம், தெரு முனை விளக்க கூட்டம் கரூர் ராயனூர், தாந்தோணிமலை கடைவீதியில் நடை பெற்றது. கிளை செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மா.ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம், மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.ஹோச்சுமின், மாநகரச் செயலாளர் எம்.தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் நகரில் புதிய மார்க்கெட் தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி னர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து  பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் துரைசாமி, சந்தானம், ஒன்றி யச் செயலாளர் அருணன், ஒன்றியக்குழு உறுப் பினர் கந்தன் ஆகியோர் துண்டு பிரசுரம் விநியோகித்தனர்.

;