districts

மாதர் சங்க மூத்த தோழர் தனலெட்சுமி மறைவு சிபிஎம் இரங்கல்

திருச்சிராப்பள்ளி, செப்.12 - திருச்சி உறையூரில் வசித்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மாதர் சங்கத்தில் செயல்பட்டு வந்த மூத்த தோழர் தனலெட்சுமி வயது மூப்பு காரணமாக திங்களன்று காலமா னார். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செய லாளர் ராஜா விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தோழர் தனலெட்சுமி கடந்த 1982  ஆம் ஆண்டு நூல் நூற்கும் பெண்கள் சங்கம் மூலம் தன்னை மாதர் சங்கத்தில் இணைத்து கொண் டார். நூல் நூற்கும் பெண்களின் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராட் டங்களை நடத்தியவர். தோழர் பாப்பா உமாநாத்துடன் இணைத்து பல்வேறு போராட்டங்களை நடத்திய களப் போராளி. பெண் உரிமைகளுக்காக போராடியவர்.  மாதர் சங்க நகரச் செயலாளராக பொறுப்பு வகித்தவர். பின்னர் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு கமிட்டி உறுப்பின ராக செயல்பட்டவர். திருச்சி மாநகர கட்சி மற்றும் மாதர் சங்கத்தின் அனைத்து  போராட்டங்களிலும் பங்கேற்றவர். தோழர் தனலெட்சுமி மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு செங்கொடி தாழ்த்தி தனது ஆழ்ந்த இரங்கலை தெரி வித்து கொள்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;