districts

தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு

பாபநாசம், ஜூன் 30- அன்னை சாரதா மகளிர் மன்றம் சார்பில் பாபநாசம் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகளுக்கு பாராட்டி, பரிச ளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை நீலாதேவி தலைமை வகித்தார். பாபநாசம் நீதிமன்ற நீதிபதி அப்துல் கனி பங்கேற்று, 12-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களை பிடித்த லிதனியானா, ஜீமானா, காவியா, லாவண்யா, 10-ஆம் வகுப்பில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஜனனி, ஹேம தர்ஷினி, ஐஸ்வர்யா ஆகியோரை பாராட்டி பரிசுகளை வழங்கினார்.

;