districts

img

ஆபத்தான முறையில் சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள்

 சின்னாளபட்டி, ஜூன் 16- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே உள்ள பச்ச மலையான்கோட்டை ஊராட்சியில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியை முறையாக சுத்தம் செய்யா ததால் புதனன்று பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்தனர். பள்ளி உணவு  இடைவேளைக்கு பின்பு மாணவர்களை பள்ளியின் மேல்  தளத்தில் ஏற வைத்து குடிதண்ணீர் தொட்டி மற்றும் பள்ளி யின் மேற்கூரையில் உள்ள இலைகளை சுத்தம் செய்ய வைத்தனர். முறையாக துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளிகளை சுத்தம் செய்யாமல் மாணவர்களை பள்ளியின் தூய்மைப் பணிக்கு ஈடுபடுத்தியது பெற் றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

;