districts

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சாவூர், அக்.21 -  தீபாவளி பண்டிகையை (அக்.24) முன் னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  (கும்பகோணம்) லிட், பொதுமக்கள் எளிதாக  எவ்வித சிரமமும் இன்றி, பயணம் செய்ய வசதி யாக சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சா வூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக் கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு அக்.21, 22, 23 ஆகிய நாட்கள்.  திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோ ணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோயம்புத்தூர், திருப்பூரிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்கள் மற்றும்  கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்கப் பகு திக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக் கும், அக்.21 முதல் அக்.23 ஆம் தேதி வரை, அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும், அனைத்து நகர் பேருந்துகளையும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன.  மேலும், அக்.21 முதல் அக்.23 வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திரு வையாறு, ஒரத்தநாடு தட பேருந்துகள், தாம்பரம்  சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, இராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப் பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதா ரண்யம் தடப் பேருந்துகள் கோயம்பேடு புரட்சித்  தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தி லிருந்தும் இயக்கப்பட உள்ளன.  மேலும், தீபாவளி முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல அக்.24, 25, 26 ஆகிய நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

;