districts

img

இளைஞர்கள் உள்ளிட்ட 50 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

குடவாசல், மார்ச்,25-  கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் ஊராட்சியில் உள்ள ஆணைதென்பாதி கிராமத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி சதீஷ்குமார் தலைமையில் இளைஞர்கள் உள்ளிட்ட 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, கட்சியில் இணைந்த தோழர்களை சால்வை போர்த்தி வரவேற்று, செங்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  இதில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எஸ்.தம்புசாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினரும் அரசவனங்காடு ஊராட்சி மன்ற தலைவருமான சுலக்சனா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.லோகநாதன், எம்.எஸ்.ஜெய்கிஷ், கிளை செயலாளர்கள் தங்கராசு, செல்லதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

;