districts

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 10ஆம் தேதி 2வது பயிற்சி வகுப்பு

சென்னை, பிப்.5 நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இரண்டாவது பயிற்சி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான 9ஆம் தேதிக்கு பதிலாக 10 ஆம் தேதி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள், வருகிற 19-ந் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சென்னை மாநகராட்சியைத் தவிர, இதர மாவட்டங்களின் வாக்குச்சாவடிகளில் பணி யமர்த்தப்படும் வாக்குப்பதிவு அலுவலர்க ளுக்கு வருகிற 9ஆம்  தேதி அன்று இரண்டாவது பயிற்சி அளித்திட அறி வுறுத்தி, அனைத்து மாவட்டத் தேர்தல் அலு வலர்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தக்க அறிவுரைகள் ஆணையத்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மாந கராட்சிக்கு 10-ந் தேதி அன்று வாக்ப் பதிவு அலுவலர்களுக்கான இரண்டா வது பயிற்சியினை வழங்கிட அறி வுறுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதர அனைத்து மாவட்டங்களிலுள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது பயிற்சி அளித்திட, ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நாளான 9.2.2022க்குப் பதிலாக நிர்வாக காரணங்களை முன்னிட்டு 10.2.2022 (வியாழக்கிழமை)  நடத்திட இவ்வாணையத்தால் அனைத்து மாவட்டத் தேர்தல் அலுவலர்கள், மாவட்ட  ஆட்சியர்களுக்கும் தற்போது தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாக அதில் அதில் கூறப்பட்டுள்ளது.

;