districts

img

திருவொற்றியூரில் 4 பேர்  ராட்சத அலையில் சிக்கி பலி

சென்னை,டிச.26-  சென்னை திருவொற்றியூர் ராமகிருஷ்ணா நகரில் வடமாநிலத்தை சேர்ந்த்  இளைஞர்கள் 8 பேர் கடலில்  குளித்து கொண்டிருந்தபோது பெரிய அலையில் சிக்கி மாயமானார்கள். ஞாயிறன்று நடைபெற்ற இந்த சம்பவத்தில் மாயமானவர்கள்  முஸ்தகீன் (வயது 22), அவருடைய தம்பி இப்ரா`ஹிம் (20), வஷீம் (26) மற்றும் புர்கான் (28) என தெரியவந்துள்ளது. இதையடுத்து மீனவர்களின் உதவியுடன் இரவு கடலுக்குள் படகில் சென்று தேடியும் 4 பேரின் சடலங்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், வஷீம் என்பவரின் சடலம் திங்களன்று காலை எண்ணூர் கடற்கரையில் ஒதுங்கியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று, வஷீமின் சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களின் சடலங்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

;