districts

img

மண்டைல உள்ள கொண்டைய மறந்த அண்ணாமலை ஆதரவாளர்கள்

கோவையில் லட்சகணக்கான மக்களின் வாக்குகளை நீக்கி விட்டதாக பீப்பிள்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலனவர்கள் வாக்களித்த அடையாளத்துடன் பங்கேற்றது மண்டைல உள்ள கொண்டைய மறந்த காமெடி ஆகி போனது.

கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக  பொதுமக்களாக உருவாக்கிய இயக்கம் பீப்பிள் பார் அண்ணாமலை என்று கூறி அந்த அமைப்பினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கோவை மக்களவை தொகுதியில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர்  பெரும்பாலான நபர்களின் கைகளில்  வாக்களித்ததற்கான அடையாளங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொதுமக்கள் உருவாக்கிய அமைப்பு என சொன்னாலும் பா.ஜ.க பாணியில்"பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி , அதே முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என தெரிவித்த அந்த அமைப்பினர், இது பொது மக்களாக உருவாக்கிய அமைப்பு இதற்கும் பா.ஜ.கவிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர். வாக்களித்தற்கான அடையாளத்துடன், வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி பீப்பிள் பார் அண்ணாமலை அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.

;