court

img

ராஜீவ் காந்தி கொலை வழக்கு... ரவிச்சந்திரனுக்கு விடுப்பிற்கு பாதுகாப்பு வழங்க முடியாது..... உயர்நீதிமன்றத்தில் அரசு பதில்....  

மதுரை:
தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பும் பாதுகாப்பும் வழங்க இயலாதுஎன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில்தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும்  ரவிச்சந்திரனுக்கு  இரண்டு மாத கால சாதாரண விடுப்பு வழங்க உத்தரவிடக்கோரி அவரது  தாயார் ராஜேஸ்வரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு  தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு புதனன்று நீதிபதிகள் கல்யாணசுந்தரம், இளங்கோவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசுத்தரப்பில், “ தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்புவழங்க இயலாது. அதோடு தற்போதைய சூழலில் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதும் இயலாதது” என்று  தெரிவிக்கப்பட்டது.மனுதாரர் தரப்பில், அரசின் இந்த காரணத்தை ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏற்கனவே தாயாரின் கண் அறுவை சிகிச்சைக்காக விடுப்பு கோரிய மனுவும்  நிராகரிக்கப்பட்டது என்றும் அரசுத்தரப்பில், அந்த மனு நிலுவையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், அந்த மனு குறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்ய உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

;