court

img

இறப்புச் சான்றிதழ் வழங்காவிட்டால் எவ்வாறு நிவாரணம் பெறமுடியும்? மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்....

புதுதில்லி:
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கிட உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை திங்களன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மத்தியஅரசு பதில் அளிக்கஉத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து வழக்கறிஞர் ரீபக்கான்சல் தாக்கல் செய்த மனுவில், “தங்களுடைய குடும்ப உறுப்பினர் எந்த நோயால் உயிரிழந்தார், இறப்புக்கான காரணம் என்ன என்பதை அரசின்அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அடிப்படையில் அறிந்துகொள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால், கொரோனாவால் உயிரிழந்ததாகக் கூறப்படும் நபர்களுக்கு இதுவரை உடற்கூறு ஆய்வு செய்துகொரோனாவால் தான் உயிரிழந்தார்களா என்று மருத்துவர்கள் ஏதும்சான்றளிக்கவில்லை. எந்த உடற்கூறு ஆய்வும் செய்யப்படவில்லை. ஆதலால், உயிரிழந்தவர் எந்தக் காரணத் தால் உயிரிழந்தார் என்பது குறித்த இறப்புச் சான்றிதழையும், அல்லது கடிதத்தையும் அந்தந்த மாநில அரசுகள் வழங்கிட உத்தரவிட வேண்டும்.தேசிய பேரிடர் மீட்பு நிதி, மாநில பேரிடர் மீட்பு நிதியில் மத்திய அரசு செய்த திருத்தப்பட்ட பட்டியல், விதிகளின்படி, 2005 பேரிடர் மேலாண்மைசட்டத்தின் 12-வது பிரிவின்படி மத்தியஉள்துறை அமைச்சகத்தின் கடிதத்தின் அடிப்படையில் பாதிக்கப் பட்டவர்கள் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம்இழப்பீடு வழங்கிட வேண்டும்’’ என்று மனுவில் கூறியிருந்தார்.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமர்வுபிறப்பித்த உத்தரவில், “கொரோனா வால் உயிரிழந்தவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் வழங்க ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் இருக்கிறதா என்பதை மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு இருந்தால் ஒரே மாதிரியான சான்றி தழ்கள் வழங்கப்பட வேண்டும்.கொரோனாவால் உயிரிழந்த வர்களுக்கு ஒரே மாதிரியான இறப்புச்சான்றிதழோ அல்லது வேறு அதிகாரப்பூர்வ ஆவணமோ வழங்காவிட்டால் உயிரிழந்தவரின் உறவினர், குடும்பத்தினர் எந்தவிதமான நிவாரண உதவியையும், இழப்பீட்டையும் பெற முடியாது.இந்த வழக்கில் மத்திய அரசு பதில்மனுத் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

;