districts

img

அடமானம் வைத்த காரை விற்றவர் மீது வழக்கு

கோவை, ஜூலை 3- வடவள்ளியில் அடமானம் வைத்த காரை விற்றவர் மீது வழக் குப்பதிவு செய்து காவல் துறையி னர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். கோவை மாவட்டம், வடவள் ளியை அடுத்த தில்லை நகரைச் சேர்ந்தவர் சரவணன் (45). இவர் சாய்பாபா காலனி பகுதி யில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு கடந்த  ஆண்டு திடீரென பணம் தேவைப்பட்டது. அப்போது பிரதீப் என்பவர் கடன் வாங்கி தருவதாக சரவணனிடம் கூறியுள்ளார். இதையடுத்து சரவணன் தன்னுடைய காரை அடமானமாக கொடுத்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வாங்கினார். 45 நாள் கழித்து சரவணன் தனது காரை திருப்பித் தரும்படி பிரதீப்பிடம் கேட்டுள்ளார். ஆனால், பிரதீப் சரியான பதில் அளிக்காமல் காரை திருப்பி தராமலும் இருந்துள்ளார். இது குறித்து சரவணன் செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார ளித்தார். இதையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சரவணனுடைய காரை பிரதீப் வாங்கி உடைத்து  உதிரிபாகங்களை கழற்றி விற்பனை செய்தது  தெரியவந்தது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், காருக்குரிய பணத்தை தருமாறு பிரதீப்பிடம் கேட்டுள்ளார். பிரதீப் 4 லட்சம் ரூபாய் தருவதாக கூறியிருக்கிறார். ஆனால், சில நாட்கள் கழித்து பிரதீப் 43 ஆயிரம் ரூபாய் மட்டும் சரவணனுக்கு அனுப்பியுள்ளார். மீதமுள்ள பணத்தை திருப்பிக்கேட்டு சரவணன் அவரை தொடர்பு கொண்ட போது, அவர் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள் ளார். இதைத்தொடர்ந்து  செல்வபுரம் காவல் நிலையத்தில் சரவணன் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் பிர தீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.

;