tamilnadu

img

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இஞ்சினில் தீ

செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து செங்கோட்டைக்கும் தினமும் மாலை 6.45 மணியளவில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், திங்கள்கிழமை இரவுசென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை ரயில், செய்வாய்கிழமை காலை செங்கோட்டை ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில்வே கேட் அருகில் வரும் போது இரண்டாவது இஞ்சினில் பிரேக் பகுதியில் இருந்து தீ உருவாகி புகை வெளிவந்தது.

அப்போது ரயில் ஓட்டுநர்கள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தி தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனா். பின்பு மெதுவாக நகா்த்தி ரயில் நிலையத்தில் ரயிலை கொண்டுவந்து நிறுத்தினா். ரயில் ஓட்டுநா்களின் சாமா்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

;