tamilnadu

img

ஊரடங்கு மேலும் நீடிக்குமா? முதல் அமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை:
கொரோனா வைரஸ் தாக்கத்தில் தற்போதைய நிலை, ஊரடங்கு மேலும் நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் மே 29ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார்.தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31ஆம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகிறது.

;