tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் 199 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவி உள்ளது. இதுவரை 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவிலும்  800க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று வரை தமிழகத்தில் கொரோனாவால் 38 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மேலும் 2 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் குணமடைந்துள்ளனர். 
பிரிட்டனில் இருந்து திரும்பிய காட்பாடி நபர் வேலூரில் தனியார் மருத்துவமனையிலும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து திரும்பிய கும்ப கோண நபருக்கு தஞ்சை அரசு  மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

;