tamilnadu

img

காஷ்மீரில் 4 தீவிரவாதிகள்  சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்:
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.தெற்கு காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள வாத்ரிகாமா கிராமத்தில்  டயல்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ஞாயிறன்று காலை அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக பாதுகாப்பு படைவீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர்.இவர்களில் ஹிஸ்புல் முஜாகி தீன் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தளபதியான தாரிக் அகமது என அடையாளம் காணப்பட்டது. மற்ற 3 பேரும் லஷ்கர்- இ - தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் என கூறப்படுகிறது. 

;