tamilnadu

உலக செஞ்சிலுவை தின விழா

விழுப்புரம்.மே.3-இளம் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற உலக செஞ்சிலுவை தின விழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் அ.ஆனந்தன் தலைமை தாங்கினார். செஞ்சிலுவைச் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ம.பாபு செல்வதுரை வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி கலந்து கொண்டு செஞ்சிலுவைச் சங்க சேவைப் பணிகள், செஞ்சிலுவை மாணவர்களின் சேவைகளை பாராட்டிப் பேசினார்.இதையடுத்து, இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த பாடுபட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவ லர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பாராட்டிப் பேசினர். விழாவில், முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட் டக் கல்வி அலுவலர் அ.ஆனந்தன் உள்ளிட்டோருக்கு இளம் செஞ் சிலுவைச் சங்கம் சார்பில் நினைவுப் பரிசுகள் வழங்கினர்.

;