tamilnadu

img

தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் - சு.வெங்கடேசன் எம்.பி கடிதத்திற்கு அமைச்சர் பதில்

புதுதில்லி, மார்ச் 17- தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என சு.வெங்கடேசன் எம்.பி., கடிதத்திற்கு அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு: தில்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப் படாமல் இருப்பது குறித்து 21.12.2021  அன்று ஒன்றிய கல்வி அமைச்ச ருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.  அதற்கு ஒன்றிய கல்வி இணை அமைச் சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் 11.03.2022 தேதியிட்ட கடிதம் வாயி லாக பதில் அளித்துள்ளார்.  தில்லி பல்கலைக் கழகம் நாடாளுமன்ற தனிச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது; தில்லி பல் கலைக் கழக சட்டம் 1922 மற்றும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட/ அவசரச் சட்ட நியதிகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்பு; அதன் முடிவுகள் அதன் செயற் குழு/கல்விக் குழு/மன்றம் ஆகிய வற்றால் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.  

எனது கடிதம் தில்லி பல்கலைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும், அதன் இந்திய நவீன மொழிகள் மற்றும் இலக்கிய கல்வித் துறையில் (Department of MIL & LS) தமிழ் சார் காலியிடங்கள் கீழ்க்கண்ட எண்ணிக்கையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.  உதவிப் பேராசிரியர் - தமிழ் - 1 (பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் - EWS), இணைப் பேராசிரியர் - தமிழ் 1 ( பட்டியல் சாதி - SC) 1 (பொரு ளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர்  - EWS), 1 ( இதர பிற்பட்ட பிரி வினர் - OBC) ஆகிய காலியிடங்கள் உள்ளன. மேலும் தயாள் சிங் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது; இந்த காலியிடங்களை நிரப்பு வதற்கான நடைமுறைகளை தில்லி பல்கலைக் கழகம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.  அமைச்சருக்கு நன்றி. தலைநகரில் தமிழ்க் கல்வி தடை யின்றி கிடைக்கட்டும்.  தில்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு உரிய இடம் இருக்க  வேண்டும், தொடர வேண்டும் என்ற எனது முயற்சிக்கு கிட்டியுள்ள நல்ல பதில். முன்னேற்றம். வெற்றி.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;