tamilnadu

img

குடிநீர் பிரச்சனையை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி, ஜூன் 23- விளாத்திகுளம் சட்டமன்ற தொகு தியில் நிலவும் கடும் குடிநீர் பிரச்ச னைக்கு உடனடி தீர்வு காண அதிமுக அரசை வலியுறுத்தி திமுக சார்பில் கனிமொழி எம்.பி. பங்கேற்ற மாபெ ரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்தி குளம் தொகுதியில் பொதுமக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண அ.தி.மு.க. அரசை வலியுறுத்தி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஞாயிறன்று விளாத்திகுளம் எம்ஜிஆர் சிலை அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக மாநில மகளிரணிச் செயலாளரும் நாடாளுமன்ற குழு துணைத் தலை வருமான கனிமொழி கருணாநிதி எம்பி. தலைமையில் மாவட்ட பொறுப் பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் திமு கழக நிர்வாகிகள் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் திமுக பொதுக்குழு உறுப்பி னர் என்பி ஜெகன், மாவட்ட திமுக துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், முன்னாள் எம்எல்ஏ ராஜமன் னார், மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் மதியழகன், விளாத்திகுளம் ஒன்றிய திமுக செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலையில் காலிக் குடங்களை சுமந்த படி கலந்து கொண்டனர். 

;