tamilnadu

கார் டயர் பஞ்சர் ஆனதால் சிக்கியது  கடத்தல் சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்

 தரங்கம்பாடி, ஜூன் 7- புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நெடுங்காடு பகுதியில் இருந்து  நாகை மாவட்டம் பொறையாறு வழியாக மயி லாடுதுறை பகுதிக்கு காரில் சாராயம் கடத்தி செல்லப்படுவதாக நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தக வல் கிடைத்தது. அதன் பேரில் பொறை யார் காவல்துறையினர் வாகனச் சோத னையில் ஈடுபட்டனர்.  இதில் விசலூர் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இரண்டு கார்கள் மற்றும் இரண்டு டூவீ லர்கள் நின்றுள்ளது பஞ்சரான ஒரு காரின் டயரை சரி செய்யும் பணியில் சிலர்  ஈடுபட்டிருந்தனர்.  காவலர்களை கண்டு அவர்கள் தப்பி ஓடினர். இதனால் சந்தே கம் அடைந்து கார்களை சோதனை யிட்டதில் ஒரு காரில் 5 ஆயிரம் பாண்டி சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது.  மேலும் அந்த காரின் டயர் பஞ்சர் ஆனதால் அதனை சரிசெய்ய மற்றொரு கார் மற்றும் 2 டூவீலர்களில் வந்தவர்கள் அதனை சரி செய்யும் போது காவ லர்கள் வந்ததால் தப்பி ஓடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாராய பாக்கெட்டு கள் மற்றும் இரண்டு கார்கள் இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்த தப்பி ஓடியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

;