tamilnadu

img

இறந்த ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், பிப்.10- மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர் அரிச்சந்தி ரனை தற்கொலைக்கு தூண்டும் வித மாக செயல்பட்ட மதுரை மாவட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு திங்களன்று சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு ஆட்டோ சங்க மாவட்ட துணைச் செயலாளர் மல்லீஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் எ.ரெங்கநதன், மாவட்ட செயலாளர் சி.சண்முகம் பொரு ளாளர் பி.சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.அகஸ்டின், செயலாளர் பி.துரைசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ரோவர் கல்லூரி, அகரம்சிகூர், அரணாரை, சிறுவாச்சூர், எசனை, பெரம்பலூர் புதிய பழைய பேருந்து நிலையம் மற்றும் வேப்பூர் குன்னம், சத்திர மனை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ சங்க கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;