tamilnadu

img

ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை: பிரதமர் அறிவிப்பு

புதுதில்லி,பிப்.5- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப் பட்டுள்ளதாகவும், அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீரத் ஷேத்ரா  என்ற பெயரில் ராமர் கோவில் கட்டுவதற்காக, அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, 5 ஏக்கர் பரப்பளவில், ராமர் கோவில் கட்டுவதற்கான செயல் திட்டம், மத்திய அரசிடம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.  இந்த அறக்கட்டளையில் ஒரு தலித் உறுப் பினர் உட்பட 15 பேர் இடம்பெற்றுள்ளனர். 

;