tamilnadu

img

ம.பி., பாஜக தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு கொரோனா? 

தில்லி 
மத்திய பிரதேச மாநிலத்தின் இளம் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா உட்கட்சி பிரச்சனை மற்றும் முதல்வர் பதவி தராததால் தனது ஆதரவு எம்ஏஎல்-க்களை அழைத்து கொண்டு கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து பாஜகவில் சேர்ந்தார். இதற்கு கைமாறாக மாநிலங்களவை எம்பி., பதவி தருவதாக பாஜக அறிவித்துள்ளது. 

இந்நிலையில், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் இருந்துள்ள நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் படி கொரோனா தோற்று இருப்பது உறுதியானதால், தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜோதிராதித்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து அவரின் தாயாரான மாதவி ராஜீ சிந்தியா கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவருக்கு அறிகுறிகள் இல்லாத போதும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

;