tamilnadu

img

கொரோனா தடுப்பு மருந்து: முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி

சென்னை: 
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில், முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றியடைந்துள்ளதாக டாக்டர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின், துணைவேந்தர் சுதா சேஷய்யன் கூறுகையில், ரிவர்ஸ் வேக்ஸினாலஜி முறையில், கொரோனா வைரஸை தடுக்கும் புரதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முதற்கட்ட ஆராய்ச்சி வெற்றி அடைந்துள்ளது. இந்த மருந்து ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும். மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸை தடுக்கும் இந்த புரதத்தை சுதா சேஷய்யன், புஷ்கலா, தம்மண்ணா ஆகியோர் அடங்கிய குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
 

;