tamilnadu

img

ஆந்திராவை மிரட்டும் கொரோனா....  இன்று ஒரே நாளில் 1,933 பேருக்கு பாதிப்பு...  

விசாகப்பட்டினம் 
தென்னிந்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,933 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை (29,168) நெருங்கி வருகிறது. மேலும் இன்று ஒரே நாளில் 19 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 328 ஆக உயர்ந்துள்ளது. 

திருப்பதியில் மேலும் 91 பேருக்கு கொரோனா 
நாட்டின் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான திருப்பதி கோவிலில் பணியாற்றும் அர்ச்சகர் மற்றும் தேவஸ்தான ஊழியர்களை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இன்று 91 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளது. இதனால் கோவிலுக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   

;