tamilnadu

img

ஆந்திராவை மிரட்டும் கொரோனா...  இன்று ஒரே நாளில் 6 ஆயிரம் பேருக்கு தொற்று...

அமராவதி 
ஆந்திரா மாநிலத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒருவார காலமாக கொரோனா வைரஸ் ராக்கெட் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த ஞாயிறன்று தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தொட்டது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தமிழகத்தில் கூட இதுவரை தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை கடக்கவில்லை என்பதால் ஆந்திர மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர். 

இந்நிலையில், அம்மாநில மக்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியாக இன்று ஒரே நாளில் 6,045 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 64,713 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 65 பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை அங்கு 32,127 பேர் குணமடைந்துள்ளனர். 

கொரோனா தினசரி பாதிப்பு விதத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இடத்தில் இருந்த தமிழகத்தை ஆந்திரா பின்னுக்குத்தள்ளி 2-வது இடத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 5000-க்குள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

;