tamilnadu

img

பீகாரில் மின்னல் தாக்கி 12 பேர் பலி 

பாட்னா 
உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் சற்று கூடுதலாகக் கனமழை பெய்து வருகிறது. ஏற்கெனவே அம்மாநில வானிலை ஆய்வு மையம் இடியுடன் கூடிய பலத்த பெய்யும் என எச்சரித்திருந்தது. 

இந்நிலையில், பீகார் மாநில முழுவதும் மின்னல் தாக்கி 12 பேர் பலியாகியுள்ளனர். சரண் மாவட்டத்தில் 9 பேரும், ஜமுய் மாவட்டத்தில் 2 பேரும், போஜ்புர் மாவட்டத்தில் ஒருவரும் என மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சரண் மாவட்டத்தில் 8 பேர் பலத்த காயத்துடன் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனப் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். 
 

;