tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை கைவிடுக! தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.20-  தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத் திந்திய மாணவர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே புதன்கிழமை ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.ஜனார்த்தனன், மாணவர் பெரு மன்ற மாவட்டச் செயலாளர் செல்லமுத்து தலைமை வகித்தனர். இந்திய மாணவர் சங்கம் மாநில குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாவட்ட குழு உறுப்பினர்கள் சந் தோஷ், நிதிஷ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட் டோர் பங்கேற்றனர்.  இதே போல் தஞ்சையில் இந்திய மாண வர் சங்கத்தின் தஞ்சை மாவட்டச் செய லாளர் ஜி.அரவிந்தசாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலை வர் சுதந்திர பாரதி முன்னிலை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநகரத் தலை வர் சிரில் இமான் நன்றி கூறினார். ஆர்ப் பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

;