tamilnadu

img

பள்ளிகளை திறக்க டிரம்ப் உத்தரவு... அமெரிக்க மக்கள் அதிர்ச்சி...

நியூயார்க் 
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் 6 மாதம் ஆகியும் இன்னும் கட்டுக்குள் வராமல் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதுவரை 55.31 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.72 லட்சம் பேர் பலியாகியுள்ள நிலையில், 29.04 லட்சம் குணமடைந்துள்ளனர். இன்னும் 24.05 லட்சம் சிகிச்சையில் உள்ளனர். 

இந்நிலையில் குழந்தைகள் மீதான கொரோனா தாக்குதல் குறைவு எனக் கூறி அமெரிக்காவில் பள்ளிகளை விரைவில் திறக்க அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிரம்பின் இந்த முடிவு அமெரிக்க மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கட்டுப்பாடு இல்லாத பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகள் திறக்கப்பட்டதால் இதுவரை 200-கும் மேற்பட்ட மாணவர்கள்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

;