tamilnadu

img

செய்தித்தாள் மூலம் கொரோனா பரவுவது குறைவான சாத்தியமே

நியூயார்க்;
செய்தித்தாள்களை பல்வேறு நபர்களும் தொடுவதால் அதன்மூலம் கொரோனா பரவுமா என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்புதெரிவிக்கையில், பல்வேறு சூழ்நிலைகள், தட்ப வெப்பநிலைகளில் எடுத்து வரப்படும் பொருள்கள் மூலம்கொரோனா பரவ குறைவான சாத்தியமே உள்ளதாககுறிப்பிட்டுள்ளது. செய்தித்தாள்களும், மற்ற பொருள்கள் போன்றதுதான். ஆதலால் செய்தித்தாள்களை வாசிக்கும் முன்பும், வாசித்த பிறகும் கைகளை சுத்தம் செய்வது
அவசியம் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரான கே.கே. அகர்வால் தெரிவித் துள்ளார்.

;