தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், சில மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.இந்நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, சிவகங்கை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், சில நகரங்களில் மிதமான மழை காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.