tamilnadu

மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சேலம், மே 15-மாணவியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துசேலம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.சேலம் மாவட்டம், அரியாம்பட்டி அருகே உள்ள செலவடை பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (27). இவர் கடந்த 9.2.2016 ஆம் தேதியன்று, அதே பகுதியை சேர்ந்த9 ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளிமாணவியிடம் ஆசைவார்த்தை கூறிஅவரை வெளியூருக்கு கடத்தி சென்றுபாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய்ஜலகண்டாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை தேடி வந்தனர்.இந்நிலையில் கடந்த 15.2.2016 ஆம் தேதியன்று செலவடை பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த ராம்குமாரை, காவல்துறையினர் போக்சோசட்டத்தில் கைது செய்து, அவரிடம் இருந்துமாணவியை மீட்டனர். பின்னர் ராம்குமாரை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இதனிடையே விசாரணை முடிவடைந்து செவ்வாயன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மாணவியை கடத்தி சென்றுபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவாலிபர் ராம்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம்அபராதமும் விதித்து, நீதிபதிமுருகானந்தம் தீர்ப்பளித்தார். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் ராம்குமாரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

;