tamilnadu

img

சேலத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கல்

சேலம், ஜூன் 7- தாதகாப்பட்டி அருகே உள்ள பள்ளியில் பயிலும் மாண வர்களின் பெற்றோர்களுக்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கமும், பள்ளி நிர்வாகமும் இணைந்து நிவாரணப் பொருட்களை வழங்கினர். சேலம் மாவட்டம், தாதகாப்பட்டி பகுதியிலுள்ள கோபாலகிருஷ்ணா அரசு நிதி உதவி துவக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிவாரண உத வியாக பள்ளி நிர்வாகம் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கம் இணைந்து 120க்கும் மேற்பட்ட பெற்றோர் களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட் களை வழங்கினர். இதில், பள்ளியின் நிர்வாகி என்.ஞானம், இந்தியன் ஓவர் சீஸ் வங்கி ஊழியர் சங்க தலைவர் தீனதயாளன், பள்ளியின் தலைமையாசிரியர் அண்ணாமலை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;