tamilnadu

img

செப்.29-ல் மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை:
மருத்துவ நிபுணர்களுடன் தமிழகமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 29 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து  தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து ள்ளது. விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர்  பிறப்பித்திருந்தார். மேலும் தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு செப்டம்பர்7 ஆம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர்  29 ஆம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.பொதுமுடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

;