tamilnadu

விதிமீறல் கட்டிடங்கள்: வரன்முறைக்கு மீண்டும் அவகாசம்

 சென்னை, ஜூன் 25- விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து தமி ழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப் படுத்துவதற்காக நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டத்தில் 113 சி  என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி 2007 ஜூலைக்கு  முன்பு கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்ப டுத்தும் திட்டமானது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  அமலுக்கு வந்தது. இதற்கான கால அவகாசம் தொடர்ந்து 4 முறை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் 5 வது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 4வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூன் 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், மேலும்  ஆறுமாத காலத்திற்கு கால அவகாசத்தை நீட்டித்து தமிழக  அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

;