tamilnadu

img

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் மறைவு: சிபிஐ இரங்கல்

சென்னை:
ராஜ் தொலைக்காட்சி ஊடகத்தில் ஒளிப்பதிவு செய்தியாளராக பணிபுரிந்து வந்த வேல்முருகன் கொரானா நோய் தொற்று தாக்குதலில் மரணமடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கொரானா நோய் தொற்று குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செய்திகளை ஒளிப்பதிவு செய்யும் முன்களப் பணியில் ஈடுபட்டு வந்த வேல்முருகன் அந்தக் கொடிய நோயுக்கு பலியாகி இருப்பது கடுமையான பாதிப்புகளை உணர்த்துகிறது.வளரும் இளைய தலைமுறை ஒளிப்பதிவு ஊடகவியலாளர் ஒருவரை தமிழகம் இழந்து நிற்கிறது.  மறைந்த வேல் முருகன் நினைவுகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த அஞ்சலி தெரிவித்துக் கொள்கிறது.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத் தினருக்கும், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறது.  தற்போது அரசின் சுகாதாரத் துறையில் ஒப்பந்த பணி செவிலியராக பணியாற்றி வரும் வேல்முருகன் மனைவியின் செவிலியர் பணியை நிரந்தர பணியாக உயர்த்தி உத்தரவு வழங்க வேண்டும். அவரது குடும் பத்தினர் மறுவாழ்வை கருத்தில் கொண்டு நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் அவர்கூறியுள்ளார்.

;