tamilnadu

img

தீக்கதிர் வளர்ச்சி நிதி வழங்கல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் துணைத் தலைவரும் சிஐடியு திண்டுக்கல் மாவட்டக்குழு உறுப்பினருமான தோழர் எம்.மாணிக்கம், நடத்துநர் பணியிலிருந்து ஏப்ரல் 30 செவ்வாயன்று ஓய்வுபெற்றார். இதையொட்டி நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழாவில், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.25 ஆயிரத்தை தீக்கதிர் முதன்மைப் பொது மேலாளர் என்.பாண்டியிடம் வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், சிஐடியு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

;