tamilnadu

img

தமிழகத்தில்தான்  பரிசோதனை அதிகம்: அமைச்சர்  

சென்னை:
கொரோனா தொற்று அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.புதிதாக பணியில் சேர்ந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி அமைச்சர் கூறியதாவது:

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு 2 ஆயிரம் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் செவிலியர்கள் பற்றாக்குறைஎன்ற நிலையே இருக்காது. தொற்று அதிகமுள்ளமகாராஷ்டிரா மாநிலத்தை விட தமிழகத்தில்தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது. தமிழகத்தில் சோதனைஅதிகரிப்பால் அதிக கொரோனா பாதிப்பை கண்டறிய முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;