tamilnadu

உள்ளாட்சித் தேர்தல்  வேட்புமனு தாக்கல்  இன்று துவக்கம்

சென்னை,டிச.8- தமிழகத்தில் 27 மாவட்டங் களில் வரும் 27 மற்றும் 30 ஆம்  தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடை பெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் திங்களன்று (டிச.9)  தொடங்குகிறது. ஒன்பது மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பி னர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவி யிடங்களுக்கு கட்சி அடிப்படை யிலும் தேர்தல் நடைபெறும்.

;