tamilnadu

img

விதைத்த உழைப்பெல்லாம் அறுவடையாகும் நாள் ஏப்ரல் 19!

சென்னை, ஏப். 18 - தமிழகத்தில் மக்களவைத் தேர்த லுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக் கிழமையன்று ஒரே கட்டமாக நடை பெறும் நிலையில், இந்த நாளில் விழிப்புடன் களப்பணியாற்றி மகத் தான வெற்றியை ஈட்டித்தர வேண்டும் என்று திமுக தலைவரும்- தமிழக  முதல்வருமான மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக திமுக தொண்டர்க ளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

குறுகிய காலத்தில் நிறைவான தேர்தல் பணி
மொத்தம் 7 கட்டங்களாக நடை பெறவிருக்கும் இந்தியாவின் 18-ஆவது நாடாளுமன்றப் பொதுத்  தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்க ளவைத் தொகுதிகளும் புதுச்சேரி யின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்கள வைத் தேர்தலை அறிவித்த நாளிலி ருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக்குறைந்த கால அவகாசத்திற் குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மக்களின் ஆதரவு நிச்சயம் வாக்குகளாக மாறும்
மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்ட மாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலை நகருக்குள் அடங்கிய தென் சென்னை - மத்திய சென்னை தொகுதி களில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திரு க்கிறது. நான் மிகுந்த நம்பிக்கை யுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக் குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதி யுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கை யும் உறுதியும் நிறைவேற, வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழ கத்தினர் மிகுந்த கவனத்துடன் செய லாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட் டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக் கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக் கான பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக் கூடிய பாக முகவர்கள், வாக்குச்சா வடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பி னர்கள் உள்ளிட்டவர்கள் தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள்.

வாக்குப்பதிவின் இறுதிவரை விழிப்புடன் இருக்கவேண்டும்
இதில், வாக்குச்சாவடி முகவர் கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடை யும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசிய மாகும். அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவி யுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்பு கிறேன்.

காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்களில் பொதுமக்கள் வாக்களிப்ப தால், நாம் பின்பற்ற வேண்டிய விதி முறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத் துறை சார்பில் மாவட்டக் கழகச் செய லாளர்கள் மூலமாக உங்களிடம் கை யேடாக வழங்கப்பட்டிருக்கும்.

முழுமையான வெற்றியை உறுதி செய்யுங்கள்
அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழ கத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள் வோர், இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப் பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந் தால்தான் வாக்கு எண்ணிக்கையின் போது கழகக் கூட்டணியின் முழுமை யான வெற்றி உறுதியாகும். விரை ந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

;