tamilnadu

img

கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு கால்வாய் திறப்பு

சென்னை:
கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது எனவும், சிக்கனமாகப் பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின்கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல்போக பாசன பரப்பான 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.இக் கோரிக்கையினை ஏற்று, தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின்கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல்போக பாசன பரப்பான 45ஆயிரத்து 41 ஏக்கர் நிலத்திற்கு, நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாள்களுக்கு முழுமையாகவும், 75 நாள்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாள்களுக்கு 6739 மி.க. அடி தண்ணீரை ஆகஸ்ட் 31 முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட உத்தரவிட்டுள்ளார்.இதனால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;