tamilnadu

img

சுதந்திர தின பவள விழா.... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு...

இந்திய சுதந்திரத்தின் 75ஆம் ஆண்டு - பவள விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவது எனவும், விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்களிப்பினை உயர்த்திப் பிடிக்க வேண்டுமென்றும்; நவீன இந்தியாவை உருவாக்குவதிலும், இந்தியா எனும் சிந்தினையை ஒருமுகப்படுத்துவதிலும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய பங்களிப்பினை மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டுமென்றும்; சுதந்திரப் போராட்டத்தில் மதவெறி ஆர்எஸ்எஸ் அமைப்பு எந்தவிதத்திலும் ஈடுபடாதது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் முழுமையாக ஒத்துழைத்தது என்ற வரலாற்று உண்மைகளை அம்பலப்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் கட்சிக் கிளைகள் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின பவள விழாவை தேசியக்கொடியேற்றி கொண்டாடுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

;