tamilnadu

தொழிலதிபர் வீட்டில் 72 பவுன் நகை கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

சென்னை,பிப்.11- சென்னை எழும்பூர் காஜா மேஜர் சாலையில் வசித்து வருபவர் தொழிலதிபர் கல்யாண்குமார் (40). இவர் கடந்த  5 ஆம் தேதி எழும்பூர் காவல்நிலையத்தில் புகார்அளித்தார். அதில், வீட்டில் வயதான பெற்றோர் உள்ளனர். அவர்களை பார்த்துக் கொள்ள ஷாலினி என்ற பெண்ணையும், லோக் நாயகி என்பவரையும் 5 வருடங்களுக்கு முன்பு வேலை யில் சேர்த்திருந்தோம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அந்த பெண் வேலைக்கு வரவில்லை. வீட்டில் இருந்த பணம் மற்றும் 75 பவுன் நகை காணாமல் போய் உள்ளது என்று கூறியிருந்தார். இந்த புகார் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,  ஷாலினியை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்த னர். மேலும், அவரிடம் இருந்து டைட்டன் வாச், முறுக்கு செயின், தங்க அரைஞாண் கயிறு, பெல் டிசைன் செயின், பூதோடு, காசு வளையம், தங்கச் செயின், மோதிரங்கள், தங்க காப்பு, வளையல், செயின் கொக்கி, மைனர் செயின், மோதிரங்கள், கம்மல், தங்க சிலுவை ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த  சேத்துப்பட்டை சேர்ந்த லோகநாயகி, பிரவீனா, அமரேசன்,  பிரவீன் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

;