மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஏப்ரல் 24 புதனன்று சென்னையில் அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன், திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் நேரில் சந்தித்து பேசினர். இச்சந்திப்புகளின் போது அமைச்சர்கள் துரைமுருகன், இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி எம்எல்ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர்.